செய்திகள்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி

கொரோனா வைரஸ்: டெல்லியில் ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதியில்லை- துணை முதல்வர்

Published On 2020-03-13 07:56 GMT   |   Update On 2020-03-13 07:56 GMT
கொரோனா வைரஸ் பீதியில் டெல்லியில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது என அம்மாநில துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. நீச்சல் குளம், திரையரங்குகள் உள்பட மக்கள் கூடும் அனைத்து இடங்களையும் மூட உத்தரவிட்ட டெல்லி அரசு, தற்போது ஐபிஎல் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இதனால் டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்பில்லை.

மத்திய அரசு சார்பில் கட்டாயம் போட்டியை நடத்த வேண்டியிருந்தால், ரசிகர்களை அனுமதிக்காமல் போட்டியை நடத்தலாம் என அறிவித்திருந்தது.

29-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சொந்த மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மார்ச் 30-ந்தேதி சந்திக்க இருந்தது.
Tags:    

Similar News