செய்திகள்
மழை நீருடன் காணப்படும் தர்மசாலா மைதானம்

டாஸ் சுண்டப்படாமலேயே இந்தியா - தென்ஆப்பிரிக்கா முதல் போட்டி ரத்து

Published On 2020-03-12 12:21 GMT   |   Update On 2020-03-12 12:21 GMT
இமாச்சல பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி இமாச்சல பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்தது. நேற்று கனமழை பெய்தது. இன்றும் மழை பெய்தது. இதனால் மைதானத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.



மைதான ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை துரிதமாக செய்தனர். என்றாலும் ஆடுகளம் ஈரப்பதமாகவே காணப்பட்டது. மேலும் மழை அச்சுறுத்திக் கொண்டே இருந்ததால் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News