செய்திகள்
ஹர்திக் பாண்ட்யா

ஐந்து மாதத்திற்குப் பின் களம் இறங்கிய முதல் போட்டியிலேயே அசத்திய ஹர்திக் பாண்ட்யா

Published On 2020-02-28 15:23 GMT   |   Update On 2020-02-28 15:23 GMT
காயத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்கள் கழித்து கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டர் பணியில் அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் சுமார் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.

இந்நிலையில் டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி20  கோப்பைக்கான தொடரில் களம் இறங்கினார்.  இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இவர் இடம் பிடித்திருந்த ரிலையன்ஸ்-1 அணி பாங்க் ஆஃப் பரோடா அணியை எதிர்கொண்டிருந்தது.

இதில் 25 பந்துகளை சந்தித்த ஹர்திக் பாண்ட்யா நான்கு சிக்சர்களுடன் 38 ரன்கள் அடித்தார். இவரது அதிரடியால் ரிலையன்ஸ் 1 அணி 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் சேர்த்தது.

அதன்பின் பந்து வீசும்போது 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால் இதனால் ஹர்திக் பாண்ட்யா விளையாடிய ரிலையன்ஸ் 1 அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News