செய்திகள்
ரபேல் நடால்

மெக்சிகோ ஓபன்: ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2020-02-28 09:33 GMT   |   Update On 2020-02-28 09:33 GMT
ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால், மெக்சிகோ ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அகாபுல்கோவில் நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி ஒன்றில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் தென்கொரியாவின் வொன் சூன்-வூவை எதிர்கொண்டார். இதில் நடால் 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நடால் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் டொமினிக் தீம்மிடம் தோல்வியடைந்தார். அதன்பின் விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.

மற்ற காலிறுதி ஆட்டங்களில் கிரிகோர் டிமிட்ரோவ் வாவ்ரிங்காவையும், டெய்லர் பிரிட்ஸ் கைல் எட்மண்ட்-ஐயும், ஜொன் இஸ்னெர் டாமி பால்-யையும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News