செய்திகள்
கிறிஸ்ட்சர்ச் ஆடுகளம்

கிறிஸ்ட்சர்ச் ஆடுகளம் படத்தை வெளியிட்ட பிசிசிஐ... இந்திய ரசிகர்களின் ரியாக்சன்....

Published On 2020-02-28 08:43 GMT   |   Update On 2020-02-28 10:58 GMT
நியூசிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டிக்காக தயாராகி வரும் கிறிஸ்ட்சர்ச்சின் ஆடுகளத்தின் படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் நாளை கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கான வெலிங்டன் ஆடுகளம் எப்படி பச்சைபசேல் என்று காட்சியளித்ததோ, அதேபோன்றுதான் கிறிஸ்ட்சர்ச்சின் ஆடுகளமும் காட்சி அளிக்கிறது.

நேற்று பிசிசிஐ கிறிஸ்ட்சர்ச் மைதானத்தின் படத்தை வெளியிட்டது. ஆடுகளத்திற்கும், அவுட் பீல்டு இடத்திற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் புற்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்தியா அணி விரைவிலேயே தோல்வியடைந்து விடும் என ரசிகர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.

இந்தியா முன்கூட்டியே இந்தியாவுக்கு திரும்ப விமானத்தை முன்பதிவு செய்ய முடியும், ஆடுகளத்தை பார்த்த பிறகு பிரித்வி ஷாவுக்கு காய்ச்சல் வந்து விட்டது போன்று டுவிட்டர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News