செய்திகள்
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் தென் ஆப்பிரிக்கா அணி வீராங்கனைகள்

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை - தாய்லாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா

Published On 2020-02-28 07:36 GMT   |   Update On 2020-02-28 07:36 GMT
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தாய்லாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று கான்பராவில் நடந்த லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா- தாய்லாந்து அணிகள் மோதின.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. லீசெல்லா லீ, சன்னே லுயஸ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது.

இதன் மூலம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்த சாதனையை தென் ஆப்பிரிக்கா அணி படைத்தது.

இதனையடுத்து களமிறங்கிய தாய்லாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியின் அபார பந்து வீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் தாய்லாந்து அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

தாய்லாந்து அணியில் இரண்டு பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்திருந்தனர். அதிகபட்சமாக ஒன்னிச்சா கம்சோம்பு 26 ரன்கள் எடுத்திருந்தார்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுனே லூஸ், ஷப்னிம் இஸ்மாயில் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சதம் அடித்த லீசெல்லா லீ ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். 
Tags:    

Similar News