செய்திகள்
KyleJamieson

முறையான ஆல்-ரவுண்டராக மாற வேண்டும் என்பதே விருப்பம் என்கிறார் கைல் ஜாமிசன்

Published On 2020-02-27 14:01 GMT   |   Update On 2020-02-27 14:01 GMT
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகம் ஆன நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன், முறையான ஆல்-ரவுண்டாக மாற வேண்டும் என்பதே விரும்ப் என தெரிவித்துள்ளார்.
வெலிங்டனில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டிலேயே அபாரமான வகையில் பந்து வீசினார். முதல் விக்கெட்டாக புஜாராவையும், 2-வது விக்கெட்டாக விராட் கோலியையும் வீழ்த்தினார். அடுத்து விஹாரியை வீழ்த்தினார். இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன்களை வீழ்த்தியதால் இந்தியா 165 ரன்னில் சுருண்டது.

நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது 45 பந்தில் 44 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோர் 300-க்கு மேல் உயர முக்கிய காரணமாக இருந்தார். கிராண்ட்ஹோம் உடன் இணைந்து 8-வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தார். இதுதான் இந்தியா வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

இந்நிலையில் முறையான ஆல்-ரவுண்டராக மாற வேண்டும் என்பதே விருப்பம் என கைல் ஜாமிசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கைல் ஜாமிசன் கூறுகையில் ‘‘நான் உயர்நிலை பள்ளியில் படிக்கும்போதும், 19 வயதிற்கு உட்பட்டோருக்கான நியூசிலாந்து அணிக்கு தயாராகும்போது பேட்டிங்கில்தான் அதிக கவனம் செலுத்தினேன். டெய்ல் ஹேட்லி உடன் சேர்ந்த பின் பந்து வீச்சாளராக மாறியுள்ளேன்.

நான் எப்போதுமே பேட்டிங்கைதான் விரும்புவேன். நான் பேட்டிங்கில் பெரிய வீரராக வளர வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால் தற்போது நான் எதிர்பார்க்காத நிலையில் பந்து வீச்சாளராக  உள்ளேன். தற்போது நான் பந்து வீச்சாளராக இருந்தாலும், என்னால் பேட்டிங்கும் செய்ய முடியும். நான் முறையான ஆல்-ரவுண்டராக மாற முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.
Tags:    

Similar News