செய்திகள்
ஹர்பஜன் சிங்

2-வது போட்டிக்கான ஆடும் லெவனை மாற்றுக: ஹர்பஜன் சிங் ஆலோசனை

Published On 2020-02-06 08:03 GMT   |   Update On 2020-02-06 08:03 GMT
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய ஆடும் லெவன் அணியில் மாற்றும் செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடரை அடுத்து தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 348 இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.

2-வது போட்டி ஆக்லாந்தில் நாளைமறுநாள் நடக்கிறது. இந்த போடடியில் இந்தியாவுக்கான ஆடும் லெவனை மாற்ற வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும். தற்போதுள்ள நியூசிலாந்து அணி எந்தவொரு வேகப்பந்து வீச்சாளரையும் எதிர்கொண்டு விளையாடி விடும்.

ஆனால், சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் திணறுவார்கள். மிடில் ஆர்டர் வரிசையில் சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களின் விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும். அதனால்தான் நான் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களம் இறங்க வேண்டும் என்று பார்க்கிறேன். கேதர் ஜாதவை ஒருவேளை நீக்கினால், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாட முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News