செய்திகள்
மறைந்த ஜக்மோகன் டால்மியா மகன் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வு
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராகி உள்ளதால் அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராகியுள்ளார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தவர் சவுரவ் கங்குலி. பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கங்குலி, போட்டியின்றி ஒருமனதாக பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவரான ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய பதவிக்காலம் 2021 நவம்பர் 6-ந்தேதி வரை இருக்கிறது. அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் 18-வது தலைவராவார். ஜக்மோகன் டால்மியா இரண்டு முறை தலைவராக இருந்துள்ளார்.
இதனால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மறைந்த முன்னாள் பிசிசிஐ தலைவரான ஜக்மோகன் டால்மியாவின் மகன் அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவருடைய பதவிக்காலம் 2021 நவம்பர் 6-ந்தேதி வரை இருக்கிறது. அவிஷேக் டால்மியா பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் 18-வது தலைவராவார். ஜக்மோகன் டால்மியா இரண்டு முறை தலைவராக இருந்துள்ளார்.