செய்திகள்
இங்கிலாந்து அணி வீரர்கள்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் இங்கிலாந்து 191 ரன் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை 3-1 எனக் கைப்பற்றியது

Published On 2020-01-27 15:29 GMT   |   Update On 2020-01-27 15:29 GMT
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 4-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 191 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 எனக் கைப்பற்றியது இங்கிலாந்து.
இங்கிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. நேற்றைய 3-வது நாள் முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 248 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 400 ரன்னும், தென்ஆப்பிரிக்கா 183 ரன்களும் அடித்திருந்ததால் தென்ஆப்பிரிக்காவுக்கு 466 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

466 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய வான் டர் துஸ்சென் சிறப்பாக விளையாடினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 98 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென்ஆப்பிரிக்கா 274 ரன்னில் ஆல்அவுட். இதனால் 4-வது டெஸ்டை 191 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரை 3-1 எனக் கைப்பற்றியது இங்கிலாந்து.
Tags:    

Similar News