செய்திகள்
சர்பராஸ் கான்

கடந்த போட்டியில் முச்சதம்: இன்று இரட்டை சதம் விளாசிய சர்பராஸ் கான்

Published On 2020-01-27 12:09 GMT   |   Update On 2020-01-27 12:09 GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்பராஸ் கான் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் விளாசி அணியை முன்னிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை - இமாச்சல அணிகள் மோதும் ஆட்டம் தரம்சாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இமாச்சல பிரதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை முதலில் பேட்டிங் செய்தது.

மும்பை 16 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறியது. அதன்பின் சர்பராஸ் கான் களம் இறங்கினார். நான்கு நாட்கள் கொண்ட முதல்-தர கிரிக்கெட் என்று பார்க்காமல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒருநாள் கிரிக்கெட் போன்று ஆடினர். இதனால் இன்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் மும்பை 75 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 372 ரன்கள் குவித்துள்ளது. சர்பராஸ் கான் 213 பந்தில் 32 பவுண்டரி, 4 சிக்சருடன் 226 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற உத்தர பிரதேசம் அணிக்கெதிரான ஆட்டத்தில் முச்சதம் (301 அவுட் இல்லை) விளாசி அணியை முன்னிலை பெற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டியின்போது இரட்டை சதத்தை முச்சதமாக மாற்றினால், அடுத்தடுத்த இன்னிங்சில் முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
Tags:    

Similar News