செய்திகள்
பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது
பாகிஸ்தான் - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
வங்காளதேசம் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் கனத்த மழையால் போட்டி நடைபெற சாத்தியம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் இன்று மதியம் 2.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் கனத்த மழையால் போட்டி நடைபெற சாத்தியம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்ததால் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.