செய்திகள்
ரிஷப் பண்ட், ரிக்கி பாண்டிங்

விரைவில் ஆடும் லெவனில் ரிஷப் பண்ட்-க்கு இடம் கிடைக்கும்: ரிக்கி பாண்டியா

Published On 2020-01-27 08:52 GMT   |   Update On 2020-01-27 08:52 GMT
டி20 கிரிக்கெட்டில் லோகேஷ் ராகுலால் இடம் கிடைக்காமல் தவிக்கும் ரிஷப் பண்ட் மீண்டும் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
இந்திய டி20 அணியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். அவருக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் மாற்றப்பட்டார். தொடர்ந்து அவர் சிறப்பாக பணியாற்றி வருவதால் ரிஷப் பண்ட்-க்குப் பதிலாக லோகேஷ் ராகுல்தான் நியூசிலாந்து தொடரில் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.

ஆனால், ரிஷப் பண்ட் விரைவில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் இளம் வீரர். அவருக்கு அதிக அளவில் திறமை உள்ளது. அவருடன் ஐபிஎல் தொடரில் பணியாற்றுவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். எல்லோரும் நினைப்பதை விரைவில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம் பிடிப்பார்’’ என்றார்.
Tags:    

Similar News