செய்திகள்
ஜெய்ஸ்வால், ஸ்டீவ் ஸ்மித்

ஜெய்ஸ்வால் பற்றி அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டேன்: ஸ்டீவ் ஸ்மித்

Published On 2020-01-23 13:38 GMT   |   Update On 2020-01-23 13:38 GMT
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்ட இளம் வீரரான ஜெய்ஸ்வால் பற்றி அற்புதமான விஷயங்களை கேள்விப்பட்டேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஐபிஎல் தொடரில் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த முறை 2-வது பாதி நேரத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த சீசனில் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது உணர்ச்சிகரமானது என்கிறார் ஸ்டீவ் ஸ்மித்.

இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருப்பது உணர்ச்சிகரமானது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே அந்த பணியை ஏற்பேன் என்று நினைக்கவில்லை. ஆகையால் நான் அதுபற்றி உற்சாகமாக உள்ளேன்.

நாங்கள் மிகவும் சிறந்த அணியை பெற்றுள்ளோம். சில சிறந்த இந்திய பேட்ஸ்மேன்கள், சில அபாயகரமான வெளிநாட்டு வீரர்களுடன் அனுபவம் மற்றும் இளைஞர்களை கொண்ட சரியான கலவை அணியை பெற்றுள்ளோம். இந்த வருடத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். நாங்கள் தொடரை சிறப்பாக தொடங்கி, அந்த உத்வேகத்தை அப்படியே நீட்டித்து இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்று நம்புகிறேன்.

நாங்கள் இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் பற்றி அற்புதமான விஷயங்களை கேள்வி பட்டேன். நாங்கள் ராபின் உத்தப்பாவை எடுத்துள்ளோம். அவருக்கு ஐபிஎல் தொடரில் அதிகமான அனுபவம் உள்ளது. பிக் பாஷ் தொடரில் அசத்தி வரும் டாம் கர்ரன் உள்ளார். டேவிட் மில்லர் ஐபிஎல் தொடரில் அவர் யார் என்பதை நிரூபித்துள்ளார். கடந்த சீசனில் ஒஷானே தாமஸ் சிறப்பாக விளையாடினார்’’ என்றார்.
Tags:    

Similar News