செய்திகள்
சக வீரர்களுடன் முஷ்டாபிஜூர் ரஹ்மான்

பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களை நினைவில் வைத்து கொள்ளுங்கள்: முஷ்டாபிஜூர் ரஹ்மான் டுவிட்

Published On 2020-01-23 10:28 GMT   |   Update On 2020-01-23 10:28 GMT
பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், உங்களுடைய பிரார்த்தனையில் எங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்ற வங்காளதேச வீரரின் டுவிட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்காளதேசம் கிரிக்கெட்  அணி  பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து  இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள்  ஒருநாள் போட்டி கொண்ட  தொடரில் விளையாட உள்ளது. முதலில் டி20 தொடர் நடக்கிறது. அதன்பின் ஒரு டெஸ்ட் போட்டி நடக்கிறது. இறுதியாக ஒருநாள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி நடக்கிறது. பாதுகாப்பு காரணத்திற்காக இப்படி நடத்தப்படுகிறது.

முன்னதாக பாகிஸ்தானில் பாதுகாப்பு நிலைமை மோசமாக இருப்பதால் வங்காள தேச கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடருக்காக பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை. முஷ்பிகுர் ரஹிம் போன்ற மூத்த வீரர்கள் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பாகிஸ்தான் செல்ல தயங்கினர். அதன்பிறகு, வங்காளதேச இளம் வீரர்களும்  சுற்று பயணத்திலிருந்து வெளியேற இருந்தனர்.

இருப்பினும், இரு அணிகளின் அதிகாரிகளும் துபாயில் பலகட்ட ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு   வங்காளதேச கிரிக்கெட் போர்டு (பி.சி.பி) தங்கள் அணியை கிரிக்கெட் தொடருக்கு அனுப்ப ஒப்புக்கொண்டது. ஆனால் நிர்பந்தம் செய்ய மாட்டோம் என வங்காளதேசம் கிரிக்கெட் போர்டு தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று வங்காளதேச அணி வீரர்கள் பாகிஸ்தான் புறப்பட்டு சென்றனர். அதற்கு முன்  முஸ்டாபிஜூர் ரஹ்மான் செய்த ட்விட் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

அணி புறப்படுவதற்கு முன்னர் தனது அணியினருடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்த ரஹ்மான் அதில் டுவிட்டரில் பதிவிட்டு  தம்மைப் பின்பற்றுபவர்களிடம் அவர்களுக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொண்டார்: அதில் "பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், உங்கள் பிரார்த்தனைகளில் எங்களை நினைவில் கொள்ளுங்கள்’’ என கூறி உள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு காரணத்தை சுட்டிக்காட்டிதான் இப்படி டுவிட் செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
Tags:    

Similar News