செய்திகள்
பும்ரா, டேவிட் வார்னர்

பும்ராவின் யார்க்கரை கண்டு வியந்தேன் - டேவிட் வார்னர்

Published On 2020-01-15 06:29 GMT   |   Update On 2020-01-15 06:29 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரித் பும்ராவின் பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்து வீச்சுகளை கண்டு வியப்படைந்ததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
மும்பை: 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி  மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 256 ரன்களை  ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.  

இதையடுத்து, களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் டேவிட் வார்னர் இந்தியாவின்  பந்து வீச்சை சிதறடித்தனர். இருவருமே சிறப்பாக விளையாடி சதமடித்தனர். இறுதியில் 39 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி இலக்கை  எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவின் பவுன்சர் மற்றும் யார்க்கர் பந்து வீச்சுகளை கண்டு வியந்தேன் என  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.  



‘ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீயைப் போன்று பவுண்டரி லைனில் இருந்து ஓடிவந்து 150கி.மீ  வேகத்தில் பந்து வீசக்கூடிய ஒருவரை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. பும்ராவிடம் அதீத திறமை உள்ளது. பும்ராவின்  யார்க்கரும், பவுன்சரும் என்னை வியக்க வைத்தது. நீங்கள் ஒரு யார்க்கர் அல்லது ஒரு பவுன்சரை சந்திக்கப் போகிறீர்கள் என்பது  உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அதை எப்படி விளையாடப் போகிறீர்கள், என்பதுதான் தனித்துவமானது’  என டேவிட் வார்னர்  கூறியுள்ளார். 

இரு அணிகளுக்கிடையேயான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் வருகிற 17-ந்தேதி நடக்க உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News