செய்திகள்
இந்திய அணி தோல்வி குறித்து விராட் கோலி கருத்து
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது குறித்து கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.
தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என மூன்று விஷயங்களிலுமே ஆஸ்திரேலியா அணி முழுமையாக எங்களை தோற்கடித்து விட்டது. ஆஸ்திரேலியா அணி தற்போது வலுவாக உள்ளது. அப்படிப்பட்ட அணிக்கு எதிராக நன்றாக விளையாடாவிட்டால் நமக்கு தான் பாதிப்பு ஏற்படும்.
நாங்கள் போதுமான ரன்கள் எடுக்கவில்லை. மேலும் குறிப்பிட்ட பகுதியில் ரன்கள் எடுக்க தவறிவிட்டோம் அது தான் பின்னடைவுக்கு வித்திட்டது. ராகுலுக்கு வழிவிடும் வகையில் 4-வது வரிசையில் பேட்டிங் செய்தேன். அடுத்த ஆட்டத்தில் எனது இடத்தை மாற்றுவது குறித்து யோசிப்போம்.’ என்றார்.