செய்திகள்
லசித் மலிங்கா

ஓய்வு பெற தயார்... இந்தியாவிடம் படுதோல்வி அடைந்ததால் மலிங்கா விரக்தி

Published On 2020-01-12 14:04 GMT   |   Update On 2020-01-12 14:04 GMT
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் எந்தவிதத்திலும் போட்டியிட முடியாமல் போன விரக்தியில் கேப்டன் பதவியில் இருந்து விலக தயார் என மலிங்கா தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகளிலும் அவருடன் பந்து வீச்சாளர்கள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணியை சேஸிங் செய்ய விடாமல் தடுக்கவும் முடியவில்லை. இந்திய அணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.

இதனால் விரக்தியடைந்த மலிங்கா எப்போது வேண்டுமென்றாலும் ஓய்வு பெற தயார் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘எந்த நேரத்திலும் நான் தயார். பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’’ என்றார்.

இதற்கிடையே முன்னாள் கேப்டன்களான திசாரா பெரேரா, மேத்யூஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மலிங்கா மீது சுமத்தப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு இவரது தலைமையில் இலங்கை அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News