செய்திகள்
மேரி கோம்

நிகாத் ஜரீனுடன் கைகுலுக்காதது ஏன்? -மேரி கோம் விளக்கம்

Published On 2019-12-28 14:09 IST   |   Update On 2019-12-28 14:09:00 IST
ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கான போட்டியின் முடிவில் நிகாத் ஜரீனுடன் கைகுலுக்காதது குறித்து மேரி கோம் விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி:

ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டி சீனாவில் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டி டெல்லியில் நடைபெற்றது. இதில், இன்று நடைபெற்ற 51 கிலோ உடல் எடைப் பிரிவினருக்கான இறுதி ரவுண்டில் மேரிகோம் வெற்றி பெற்று, ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இந்த போட்டியின் முடிவில் மேரி கோம், தன்னை எதிர்த்து போட்டியட்ட நிகாத் ஜரீனுடன் கைகுலுக்காமல் சென்றுவிட்டார். இது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, நான் ஏன் அவருடன் கைகுலுக்க வேண்டும்? என எதிர்கேள்வி கேட்டார் மேரி கோம்.

‘பிறர் நம்மை மதிக்க வேண்டும் என விரும்பினால் நாம் மற்றவர்களை மதிக்க வேண்டும். அத்தகைய குணம் கொண்டவர்களை நான் விரும்பவில்லை. குத்துச்சண்டை வீராங்கனை தன் தகுதியை களத்தில்தான் நிரூபிக்க வேண்டும், வெளியே அல்ல’ என மேரி கோம் தெரிவித்தார்.

மேரி கோமை நேரடியாக ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு அனுப்ப நிகாத் ஜரீன் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Similar News