செய்திகள்
4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4-வது இடத்தில் களம் இறங்க இவர் சரியான நபர் என்று தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியில் 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடுவதற்கு இன்னும் நிரந்தரமான பேட்ஸ்மேன் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப பேட்ஸ்மேன்களை களம் இறக்கி வருகிறது.
இந்நிலையில்தான் உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்த போது ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்தில் களம் இறங்கினார். விராட் கோலியுடன் இணைந்து இரண்டு போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஷ்ரேயாஸ் அய்யர்தான் 4-வது இடத்திற்கு சரியான நபர் என்றார்.
இந்நிலையில் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் அந்த இடம் எனக்குதான் என்று சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது, 4-வது இடத்திற்கு நான் இல்லை என்று ஷ்ரேயாஸ் அய்யர் சொன்னால், எனக்கு அது மிகமிக ஆச்சர்யமானதாக இருக்கும்.
அவருக்கு 25 வயதுதான் ஆகிறது. ஆனால், ஏராளமான முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். 4-வது இடத்தில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் உணர்ந்திருப்பார். இதுதான் முக்கியமான விஷயம்’’ என்றார்.
இந்நிலையில்தான் உலகக்கோப்பை தொடருக்குப்பின் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றிருந்த போது ஷ்ரேயாஸ் அய்யர் 4-வது இடத்தில் களம் இறங்கினார். விராட் கோலியுடன் இணைந்து இரண்டு போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் ஷ்ரேயாஸ் அய்யர்தான் 4-வது இடத்திற்கு சரியான நபர் என்றார்.
இந்நிலையில் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் அதே கருத்தை தெரிவித்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் அந்த இடம் எனக்குதான் என்று சொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரவி சாஸ்திரி கூறுகையில் ‘‘தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்வதை பார்க்கும்போது, 4-வது இடத்திற்கு நான் இல்லை என்று ஷ்ரேயாஸ் அய்யர் சொன்னால், எனக்கு அது மிகமிக ஆச்சர்யமானதாக இருக்கும்.
அவருக்கு 25 வயதுதான் ஆகிறது. ஆனால், ஏராளமான முதல்-தர கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். 4-வது இடத்தில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அவர் உணர்ந்திருப்பார். இதுதான் முக்கியமான விஷயம்’’ என்றார்.