செய்திகள்
இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2 டெஸ்டில் விளையாட இலங்கை அணி பாகிஸ்தான் சென்றது

Published On 2019-12-09 06:52 GMT   |   Update On 2019-12-09 06:52 GMT
குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றது.
குணரத்னே தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இன்று பாகிஸ்தான் சென்றது. இஸ்லாமபாத் விமான நிலையத்தில் இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பலத்த பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 11-ந்தேதி ராவல்பெண்டியில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் 19-ந்தேதி கராச்சியில் நடக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை இழந்தது. 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News