செய்திகள்
ஆர்சிபி

தொடக்க பேட்ஸ்மேன் யார்?: ரசிகர்களிடம் கேள்வி கேட்ட ஆர்சிபி-க்கு நறுக்கென பதில் அளித்த பார்தீவ் பட்டேல்

Published On 2019-12-01 12:11 GMT   |   Update On 2019-12-01 12:11 GMT
விராட் கோலியுடன் தொடக்க வீரராக யார் களம் இறங்க விரும்புவீர்கள்? என்று ரசிகர்களிடம் ஆர்சிபி கேள்வி கேட்டதற்கு பார்தீவ் பட்டேல் நறுக்கென பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. அந்த அணியின் கேப்டன் விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார்.

2019 சீசனில் அவருடன் பார்தீவ் பட்டேல் தொடக்க வீரராக களம் இறங்கினார். ஆனால் விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் கர்நாடகா வீரர் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரராக களம் இறங்கி அபாரமாக விளையாடி வருகிறார்.

அவரை ஆர்சிபி தக்க வைத்துள்ளது. அடுத்த சீசனில் தேவ்தத் படிக்கல் ஆர்சிபி அணியில் முக்கிய பங்காற்றுவார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், ‘‘நமக்கு 240 சேஸிங் என்றால், எதிர்முனையில் விராட் கோலி இருந்தால், மற்றொரு முனையில் நீங்கள் தேவ்தத் படிக்கல் அல்லது பார்தீவ் பட்டேல் ஆகியோரில் யாரை தேர்வு செய்வீர்கள்’’ என ரசிகர்களிடம் ஆர்சிபி அணி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கேள்வி கேட்டிருந்தது.

இதனை வைத்து பார்க்கும்போது பார்தீவ் பட்டேல் தொடக்க வீரர் வரிசையில் இருந்து இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘‘நாங்கள் 239 ரன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் ஏன் விரும்புகிறீர்கள்?’’ என பதில் அளித்துள்ளார்.
Tags:    

Similar News