செய்திகள்
கிறிஸ் கெய்ல்

ஒன்றிரண்டு முறை ரன் அடிக்காவிடில் அணிக்கு சுமையாகி விடுகிறேன்: கிறிஸ் கெய்ல் ஆதங்கம்

Published On 2019-11-25 15:07 GMT   |   Update On 2019-11-25 15:07 GMT
யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் மான்சி தொடரில் இருந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக்கில் விளையாடினார். முதல் ஆறு போட்டிகளில் விளையாட நடப்பு சாம்பியன் ஜோசி ஸ்டார்ஸ் அணியுடன் உடன் அணியுடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

அந்த அணி 6 போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. நேற்று நடைபெற்ற 6-வது போட்டியில் கிறிஸ் கெய்ல் அரைசதம் அடித்தாலும் அந்த அணியால் வெற்றி பெறவில்லை.

இதனால் சோகத்துடன் வெளியேறும் கிறிஸ் கெய்ல், நான் சில போட்டிகளில் விளையாடவில்லை என்றால், அணிக்கு சுமையாகி விடுவேன் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘நான் இந்த அணியைப் பற்றி மட்டும் பேசவில்லை. கடந்த சில வருடங்களாக விளையாடி வரும் எல்லா அணிகளையும் பற்றி இந்த விஷயத்தை பற்றி ஆராய்ந்துள்ளேன். ஒன்றிரண்டு போட்டிகளில் நான் விளையாடவில்லை என்றால், நான் அவர்களுக்கு சுமையாகிவிடுகிறேன். இது போன்று ஒரு தனிப்பட்ட வீரர் அணிக்கு சுமையாகி விடுகிறார்.



நான் மரியாதையை பெறுவதற்காக செல்லவில்லை. மக்கள் அவர்களுக்காக என்ன செய்தோம் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க மாட்டார்கள். எனக்கு மரியாதை கிடைக்கவில்லை.

நான் அந்த அணியை பற்றி பேசவில்லை. நான் பொதுவாக பேசுகிறேன். ஒரு வீரர், நிர்வாகம், தலைமை நிர்வாகம், போர்டு உறுப்பினர் என பேசுகிறேன். ஒருமுறை விளையாட வில்லை என்றால், என்னுடைய கேரியர் முடிந்து விடுகிறது. அவர் நன்றாக விளையாடவில்லை. மோசமான வீரர் என்று பேசத் தொடங்கி விடுகிறார்கள். இது போன்ற விஷயங்களை நான் எப்போதுமே ஒதுக்கிவிடுவேன்’’ என்றார்.
Tags:    

Similar News