செய்திகள்
மேட்ச் பிக்சிங்

மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம்: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்

Published On 2019-11-12 11:05 GMT   |   Update On 2019-11-12 11:05 GMT
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 10 வருடம் சிறைத் தண்டனை என இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது.
கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக இருப்பது மேட்ச் பிக்சிங்குதான். இந்த விவகாரத்தில் சிக்கி பெரும்பாலான வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்துள்ளனர்.

மேட்ச் பிக்சிங்கை தடுக்க ஐசிசி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதேவேளையில் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மேட்ச் பிக்சிங்சை தடுக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன.

இலங்கை கிரிக்கெட் போர்டு மேட்ச் பிக்சிங்சை கிரிமினல் குற்றத்தின் கீழ் கொண்டு வர ஆலோசித்து வந்தது. இந்நிலையில் விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதா  பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் சட்டமாக நிறைவேறியது. இதன்மூலம் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் கிரிமினல் குற்றமாகும் என்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் ஆசிய நாடு என்ற பெயரை பெற்றுள்ளது இலங்கை.
Tags:    

Similar News