செய்திகள்
இர்பான் பதான், பர்வேஸ் ரசூல்

இர்பான் பதான், பர்வேஸ் ரசூல் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் சந்திப்பு

Published On 2019-11-12 08:26 GMT   |   Update On 2019-11-12 08:26 GMT
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகர் இர்பான் பதான், கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆகியோர் பிசிசிஐ தலைவர் கங்குலியுடன் சந்தித்து பேசினர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மேற்கு வாங்காள கிரிக்கெட் சங்கத் தலைவராக இருந்தவருமான சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்ளூர் கிரிக்கெட்டை வளர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் அணியின் ஆலோசகரான இர்பான் பதான், அந்த அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூல் ஆகியோர் பிசிசிஐ தலைவர் கங்குலியை சந்தித்து ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.

அப்போது ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் வளர்ச்சிக்கு தேவைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அவர்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி அளித்துள்ளார்.
Tags:    

Similar News