செய்திகள்
விராட் கோலி

31-வது பிறந்தநாளை கொண்டாடினார் விராட் கோலி

Published On 2019-11-05 06:56 GMT   |   Update On 2019-11-05 06:56 GMT
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 31-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவர் விராட் கோலி.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழும் அவர் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார்.

இதனால் அவர் பல்வேறு சாதனைகளை புரிந்து வேறு எந்த பேட்ஸ்மேனுக்கும் ஈடு கொடுக்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகிறார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன் பதவியிலும் அவர் மிகவும் சிறப்பான நிலையில் இருக்கிறார். தற்போது வங்காள தேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விராட் கோலி தனது 31-வது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். அவர், மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேபாளத்தில் இருக்கிறார். அங்குள்ள மக்களை சந்தித்து அவர் தனது பொழுதை போக்கி மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்.

வங்காளதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் கோலி விளையாடுகிறார். அப்போது அவர் அணியுடன் இணைந்து கொள்வார்.

விராட் கோலி சர்வதேச போட்டிகளில் 21 ஆயிரத்து 36 ரன் எடுத்துள்ளார். 82 டெஸ்டில் விளையாடி 7,066 ரன்னும் (26 சதம், 22 அரை சதம்), 239 ஒரு நாள் போட்டியில் விளையாடி 11,520 ரன்னும் (43 சதம், 54 அரை சதம்) எடுத்துள்ளார்.

72 இருபது ஓவரில் விளையாடி 2,450 ரன் எடுத்துள்ளார். 22 அரை சதம் இதில் அடங்கும். 20 ஓவர் போட்டியில் அவர் இதுவரை சதம் அடிக்கவில்லை.
Tags:    

Similar News