செய்திகள்
கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சனில் தவறு ஏதுமில்லை: ஐசிசி நற்சான்றிதழ்
கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சனில் தவறு ஏதும் இல்லை என்று சர்வதேச கிரிக்கெட் கமிட்டி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.
காலே மைதானத்தில் இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்று ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சன் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அப்போது ஐசிசி அனுமதித்துள்ள 15 டிகிரிக்கு மேல் அவரது கை வளையவில்லை என்பது தெரியவந்தது. இதனால் கேன் வில்லியம்சனை தொடர்ந்து பந்து வீச ஐசிசி அனுமதித்துள்ளது.
ஏற்கனவே 2014-ல் இதுபோன்று புகார் எழுப்பப்பட்டது. அப்போது அவரது பந்து வீச்சில் சில மாற்றங்களை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சன் குறித்து புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அப்போது ஐசிசி அனுமதித்துள்ள 15 டிகிரிக்கு மேல் அவரது கை வளையவில்லை என்பது தெரியவந்தது. இதனால் கேன் வில்லியம்சனை தொடர்ந்து பந்து வீச ஐசிசி அனுமதித்துள்ளது.
ஏற்கனவே 2014-ல் இதுபோன்று புகார் எழுப்பப்பட்டது. அப்போது அவரது பந்து வீச்சில் சில மாற்றங்களை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.