ஆசியக் கண்டத்தில் தொடர்ச்சியாக 9 முறை டாஸ் தோற்ற விரக்தியில், நாளைய போட்டியின்போது மாற்று வீரரை டாஸ் கேட்க அனுப்புகிறாராம் டு பிளிசிஸ்.
ஆசிய கண்டத்தில் விளையாடும்போது டெஸ்ட் போட்டியில் டாஸ் வெல்லது மிகமிக முக்கியமானது. டாஸ் வென்று முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் குவித்துவிட்டால், வெற்றியை எளிதாக்கி விடலாம். ஆனால், இந்தியாவிற்கு எதிராக டு பிளிசிஸ் இரண்டு போட்டிகளிலும் டாஸ் தோற்றார்.
இதுகுறித்து டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘அநேகமாக டாஸ் கேட்ட நான் வேறு யாரையாவது ஒருவரை அனுப்புவேன். ஏனென்றால், ஆசியக் கண்டத்தில் டாஸ் ஜெயிப்பதில் எனக்கு சிறப்பான ரெகார்டு இல்லை. டாஸ் வென்று முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்து விட்டால், 2-வது இன்னிங்ஸ் அதன் வழியேச் செல்லும்’’ என்றார்.