செய்திகள்
அஸ்வின்

அஸ்வினை டெல்லி அணிக்கு விற்கும் முடிவை கைவிட்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப்

Published On 2019-10-15 13:51 GMT   |   Update On 2019-10-15 13:51 GMT
கேப்டனாக செயல்பட்ட அஸ்வினை டெல்லி கேப்பிட்ல்ஸ் அணிக்கு விற்க இருந்த முடிவை மாற்றியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் அஸ்வின். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களில் கேப்டனாக செயல்பட்டார்.

இவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு விற்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முடிவு செய்தது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலேயே அஸ்வின் இருப்பார் என உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெஸ் வாடியா கூறுகையில் ‘‘கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிர்வாகம் மறுசிந்தனை செய்து, அணியின் ஒரு அங்கமாக அஸ்வினை வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அதில் நல்ல முடிவு எட்டப்படவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News