செய்திகள்
நான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால்?: கார்த்தி சிதம்பரம் டுவிட்
பிசிசிஐ-யின் செயலாளராக அமித் ஷாவின் மகன் பதவி ஏற்க இருக்கும் நிலையில், கார்த்தி சிதம்பரம் டுவிட்டரில் எழுப்பிய கேள்விக்கு, டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளர் பதவிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் போட்டியிடுகின்றனர்.
இருவரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், முன்னாள் உள்துறை மந்திரியான ப.சிதம்பரத்தின் மகனும், தற்போதைய பாராளுமன்ற எம்.பி.யும் ஆன கார்த்தி சிதம்பரம், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனது தந்தை காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி ஆட்சியில் உள்துறை மந்திரியாக இருந்தபோது, நான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால், தேசியவாதம் பேசக்கூடியவர்கள், எப்படி எதிர்வினையாற்றிருப்பார்கள்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் சங்கத்தில் பல்வேறு பதவிகள் வகித்ததை ஞாபகப்படுத்தி டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இருவரும் நேற்று மனுதாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.
அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கும் நிலையில், முன்னாள் உள்துறை மந்திரியான ப.சிதம்பரத்தின் மகனும், தற்போதைய பாராளுமன்ற எம்.பி.யும் ஆன கார்த்தி சிதம்பரம், அவரது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனது தந்தை காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணி ஆட்சியில் உள்துறை மந்திரியாக இருந்தபோது, நான் பிசிசிஐ-யின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தால், தேசியவாதம் பேசக்கூடியவர்கள், எப்படி எதிர்வினையாற்றிருப்பார்கள்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு கார்த்தி சிதம்பரம் டென்னிஸ் சங்கத்தில் பல்வேறு பதவிகள் வகித்ததை ஞாபகப்படுத்தி டுவிட்டர்வாசிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.