செய்திகள்
100 பந்து கிரிக்கெட்

100 பந்து கிரிக்கெட்: 165 வெளிநாட்டு வீரர்கள் விளையாட விருப்பம்

Published On 2019-10-04 13:33 GMT   |   Update On 2019-10-04 13:33 GMT
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டினால் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் 100 பந்து கிரிக்கெட்டில் விளையாட கிறிஸ் கெய்ல், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஐந்து நாட்களாக நடத்தப்பட்டு வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்க்கும் ரசிர்கள் ஆர்வம் வெகுவாக குறைந்ததுள்ளது. இதனால் ஒருநாள் ஆட்டத்தை தொடர்ந்து டி20 கிரிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த போட்டியில் மேலும் சுவாரஸ்யம் கூட்ட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விரும்பியது. இதனால் 100 பந்து கிரிக்கெட் லீக் என்ற தொடரை அறிமுகம் படுத்த இருக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு வீரர்களின் விண்ணப்பம் வரவேற்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கிறிஸ் கெய்ல், ரஷித் கான், டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், பாபர் அசாம் உள்பட 165 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வருகிற 20-ந்தேதி விண்ணப்பம் தெரிவித்திருந்து வீரர்கள் அடங்கிய முழுப்பட்டியல் வெளியிடப்படும்.
Tags:    

Similar News