செய்திகள்
விராட் கோலி, ரோகித் சர்மா

தொடக்க இடத்தில் அவரது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வரை ஹிட்மேனுக்கு வாய்ப்பு: விராட் கோலி

Published On 2019-10-01 10:17 GMT   |   Update On 2019-10-01 10:17 GMT
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான ரோகித் சர்மாவுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வரும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியிலும் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாட இருக்கிறார்.

பொதுவாக ரோகித் சர்மா ஸ்விங் பந்தில் சற்று தடுமாறுவார். டெஸ்ட் போட்டி பந்தான சிகப்பு பந்து 20 ஓவர்களுக்குப் பிறகு கூட பந்து ஸ்விங் ஆகும். இதனால் ரோகித் சர்மா எப்படி விளையாடுவார்? என்ற கேள்வி ரசிகர்களின் முன் இருக்கிறது.

இந்நிலையில் ரோகித் சர்மா தொடக்க இடத்தில் அவரது வழக்க ஆட்டத்தை வெளிப்படுத்தும் வரை வாய்ப்பு வழங்கப்படும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘ரோகித் சர்மா தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் வெற்றி பெற்றால், எங்களது டாப் ஆர்டர் பேட்டிங் வரிசை மேலும் அச்சுறுத்தலாக இருக்கும். ஒவ்வொரு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது தொடக்க வரிசையில் களம் இறங்கும் வீரர்களுக்கு கடினமானது.

ரோகித் சர்மா அவரது வழக்கமான பேட்டிங் நிலைக்கு வந்து விட்டால், மற்ற அணிகளை விட முற்றிலும் மாறுபட்ட பேட்டிங் ஆர்டரை கொண்ட அணியாக திகழ்வோம்.

ரோகித் சர்மாவுக்கு இத்தனை போட்டிகளில்தான் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று நெருக்கடி கொடுக்க விரும்பவில்லை. இந்தியாவில் பின்பற்றப்படும் முறை வெளிநாட்டில் மாறுபடும். தொடக்க இடத்தில் பேட்டிங் செய்யும் வீரர்களுக்கு அவர்களது சொந்த ஆட்டத்தை புரிந்து கொள்ளும் வரை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

ரோகித் சர்மாவுக்கு அவரது சொந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வரை வாய்ப்புகள் வழங்கப்படும். தொடக்க காலத்தில் நான் டெஸ்ட் போட்டியில் 6-வது இடத்தில் களம் இறங்கினேன். தற்போது 4-வது இடத்தில் களம் இறங்குகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் என்பது மாறுபட்ட சூழ்நிலையில் உங்களது ஆட்டத்தை கண்டுபிடிப்பதாகும்’’ என்றார்.
Tags:    

Similar News