செய்திகள்
கோப்பு படம்

கொல்கத்தாவில், டிசம்பர் 19-ந்தேதி ஐ.பி.எல். வீரர்கள் ஏலம்

Published On 2019-10-01 09:39 GMT   |   Update On 2019-10-01 09:39 GMT
13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.
புதுடெல்லி:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டிக்கு வீரர்கள் ஏல முறையில் எடுக்கப்பட்டு வருகிறார்கள்.

13-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது.

வழக்கமாக வீரர்கள் ஏலம் பெங்களூரில் நடைபெறும். தற்போது முதல்முறையாக ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் கொல்கத்தாவில் நடக்கிறது. ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சொந்தநகராக கொல்கத்தா இருக்கிறது.

ஒவ்வொரு அணியும் ஐ.பி.எல்.ஏலத்தில் ரூ.85 கோடி வரை செலவு செய்யலாம். இது கடந்த ஆண்டை விட ரூ.3 கோடி கூடுதல் ஆகும். கடந்த ஆண்டு ஒவ்வொரு அணிக்கும் தலா ரூ.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

போட்டியில் விளையாடும் 8 அணிகளும் வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான காலம் நவம்பர் 14-ந்தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News