செய்திகள்
விராட் கோலி

மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலிதான்

Published On 2019-09-19 15:05 GMT   |   Update On 2019-09-19 15:05 GMT
டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரு பேட்ஸ்மேன் என்ற பெருமையை தக்கவைத்துள்ளார் விராட் கோலி.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று மொகாலியில் நடைபெற்றது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 72 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது.

72 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் (22), அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2-வது இடத்தில் ரோகித் சர்மா உள்ளார்.

அதுமட்டுமல்ல மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ள ஒரே பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 71 போட்டிகளில் 66-ல் பேட்டிங் செய்து 2441 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 50.85 ஆகும்.

ஒருநாள் போட்டியில் 60.31 சராசரியும், டெஸ்ட் போட்டியில் 53.14 சராசரியும் வைத்துள்ளார்.
Tags:    

Similar News