செய்திகள்

கவுன்ட்டி கிரிக்கெட் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார் ரகானே

Published On 2019-04-19 13:03 GMT   |   Update On 2019-04-19 13:03 GMT
இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார் இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே #Rahane
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் ரகானே இடம் பெறவில்லை.

இதை பயன்படுத்தி இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளார்.



பிசிசிஐ அனுமதி வழங்கினால் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News