செய்திகள்

ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும்: பிசிசிஐ தலைவர் சிகே கண்ணா

Published On 2019-01-20 09:42 GMT   |   Update On 2019-01-20 09:42 GMT
ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுலை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவர் சிகே கண்ணா கேட்டுக்கொண்டுள்ளார் #HardikPandya
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ‘காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டர். அப்போது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் இருவரும் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக நாடு திரும்பினார்கள். ஆனால், இருவர் மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை.

இந்நிலையில் பிசிசிஐ-யின் பொறுப்பு தலைவரான சிகே கண்ணா இருவருக்கும் ஆதரவாக பேசியுள்ளார். இதுகுறித்து சிகே கண்ணா கூறுகையில் ‘‘அவர்கள் தவறு செய்து விட்டார்கள். அவர்களை நாம் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துள்ளோம். இதனால் ஆஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக திருப்பி அனுப்பப்பட்டனர். தவறுக்காக எந்தவித நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்டுள்ளனர். அவர்களுடைய கேரியர்ஸ்-க்கு தடை போடக்கூடாது’’ என்றார்.
Tags:    

Similar News