செய்திகள்

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: பாண்டியா, லோகேஷ் ராகுலுக்கு இரண்டு போட்டியில் தடை?

Published On 2019-01-10 08:16 GMT   |   Update On 2019-01-10 08:16 GMT
பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து விவகாரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு தலா இரணடு போட்டியில் விளையாட தடைவிதிக்க வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:

இந்திய கிர்க்கெட் வீரர்கள் ஹர்த்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொலைக்காட்சி பேட்டியின்போது பெண்கள் குறித்து தவறான வகையில் கருத்து கூறியதால் சர்ச்சை எழுந்தது.

இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பாண்டியா இதற்காக மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்திருந்தார்.

பாண்டியாவின் விளக்கம் தனக்கு திருப்திகரமான இல்லை என்று கூறிய நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ‘‘பெண்கள் குறித்து சர்ச்சையாக தெரிவித்த பாண்டியா, ராகுலுக்கு 2 ஒருநாள் போட்டியில் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளேன்’’ என்றார். மேலும்,‘‘நிர்வாகக்குழுவின் மற்றொரு அதிகாரியான டயானா எடுல்ஜி-யின் கருத்தை பொறுத்து இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’’ என வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News