செய்திகள்

பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் - உலகின் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்பு

Published On 2018-11-23 10:42 IST   |   Update On 2018-11-23 10:42:00 IST
உலக டென்னிஸ் தர வரிசையில் முன்னணியில் உள்ள வீராங்கனைகளில் 7 பேர் பிரிஸ்பேன் சர்வதேச தொடரில் பங்கேற்க உள்ளனர். #BrisbaneInternational #ElinaSvitolina
கான்பெரா:

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வரும் டிசம்பர் 31-ம்தேதி முதல் ஜனவரி 6-ம் தேதி வரை சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளன. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் இத்தொடரில், உலகின் முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று திறமையை நிரூபிக்க உள்ளனர்.

இந்நிலையில் உலக டென்னிஸ் தர வரிசையில் உள்ள டாப்-10 வீராங்கனைகளில் 7 வீராங்கனைகள் பிரிஸ்பேன் தொடரில் பங்கேற்க உள்ளனர். எலினா ஸ்விடோலினா, நவோமி ஒசாகா, ஸ்லோனே ஸ்டீபன்ஸ் ஆகியோர் இத்தொடரில் பங்கேற்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.



உலக தர வரிசையில் 4ம் இடத்தில் உள்ள ஸ்விடோலினா, டபுள்யுடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் வெற்றி பெற்ற நிலையில், பிரிஸ்பேன் பட்டத்தையும் தக்க வைப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. #BrisbaneInternational #ElinaSvitolina

Tags:    

Similar News