20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி
புரோடென்ஸ்:
6-வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ‘பி’பிரிவில் உள்ள இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்தியாவுக்கு இது 3-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது.
நேற்று நள்ளிரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (பி பிரிவு) மோதின. முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்தது. பேட்ஸ் 35 ரன்னும், டேவின் 32 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 90 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசிலாந்து பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ‘பி’ பிரிவில் இருந்து ஏற்கனவே ஆஸ்திரேலியா இந்தியா ஆகிய அணிகள் அலை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டன. நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்துவிட்டன. #WomenWorldT20 #Pakistan #NewZealand