செய்திகள்

புரோ கபடி லீக் - பெங்கால் வாரியர்சை வீழ்த்தி ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது பாட்னா

Published On 2018-11-10 20:13 GMT   |   Update On 2018-11-10 20:13 GMT
புரோ கபடி லீக் போட்டியில் மும்பையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்திய பாட்னா பைரேட்ஸ் அணி தனது ஐந்தாவது வெற்றியை பதிவுசெய்தது. #ProKabaddi
மும்பை:

12 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியும், பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பாட்னா பைரேட்ஸ் அணி சிறப்பாக ஆடியது. இதனால் அந்த அணியின் புள்ளிகள் மளமளவென உயர்ந்தன. இதனால் முதல் பாதியில் 22- 14 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னா அணி முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் பாட்னா அணி தனது துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில், பெங்கால் அணியை 50 - 30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி பாட்னா அணி அபார வெற்றி பெற்றது. இது அந்த அணிக்கு கிடைத்த ஐந்தாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. #ProKabaddi 
Tags:    

Similar News