செய்திகள்

நாங்கள் சிறப்பு, ஆனால் இங்கிலாந்து அதைவிட சிறப்பு- ரகானே

Published On 2018-09-07 09:19 GMT   |   Update On 2018-09-07 09:19 GMT
நாங்கள் சிறப்பாக விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள் என ரகானே தெரிவித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடர் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு டெஸ்டில் இந்தியா மூன்றில் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டியது. துரதிருஷ்டவசமாக தோல்வியை சந்தித்தது. கடைசி டெஸ்ட் இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.



இந்த டெஸ்ட் குறித்து இந்திய துணைக் கேப்டன் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது ‘‘நான்கள் மூன்று டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாகத்தான் விளையாடினோம். ஆனால் எங்களை விட இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News