செய்திகள்

மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் வெண்கல பதக்கம் வென்றார்

Published On 2018-08-21 13:01 GMT   |   Update On 2018-08-21 13:01 GMT
பெண்களுக்கான ப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் 10-0 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார். #AsianGames2018
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான மல்யுத்தம் போட்டிகள் இன்று நடைபெற்றன. ப்ரீஸ்டைல் 68 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் காலிறுதி ஒன்றில் மங்கோலிய வீராங்கனை டுமென்ட்செட்கெக்-ஐ எதிர்கொண்டார். இதில் திவ்யா கக்ரன் 1-11 என தோல்வியடைந்தார்.



டுமென்ட்செட்கெக் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் அவரிடம் காலிறுதியில் தோல்வியடைந்த திவ்யா கக்ரன் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் அரையிறுதியில் தோல்வியடைந்த சீன தைபேயின் வென்லிங் சென்னை எதிர் கொண்டார். இதில் திவ்யா கக்ரன் 10-0 என வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
Tags:    

Similar News