செய்திகள்
ஆசிய விளையாட்டு- துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளி வென்றார் தீபக் குமார்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் வீரர் தீபக் குமார், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். #AsianGames2018 #DeepakKumar
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் நடைபற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ரவிக் குமார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச்சுற்றில் 247.7 புள்ளிகள் பெற்றார்.
இப்பிரிவில் சீன வீரர் யங் ஹோரன் 249.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். தைவான் வீரர் லு ஷாவோசுவான் மூடுன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். ரவிக்குமார் 4-வது இடத்தைப் பிடித்தார். #AsianGames2018 #DeepakKumar
இந்தோனேசியாவில் நடைபற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள் ரவிக் குமார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச்சுற்றில் 247.7 புள்ளிகள் பெற்றார்.
இப்பிரிவில் சீன வீரர் யங் ஹோரன் 249.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார். தைவான் வீரர் லு ஷாவோசுவான் மூடுன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். ரவிக்குமார் 4-வது இடத்தைப் பிடித்தார். #AsianGames2018 #DeepakKumar