செய்திகள்

நோசோமி ஓகுஹாராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து

Published On 2018-08-03 16:23 GMT   |   Update On 2018-08-03 16:23 GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து. #PVSindhu
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நோசோமி ஒகுஹாராவை எதிர் கொண்டார்.

இதில் பிவி சிந்து 21-17, 21-19 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். முதல் செட்டில் ஒகுஹாரா 4-1 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் 7-4 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் பிவி சிந்து 10-9 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் 21-17 என பிசி சிந்து முதல் செட்டை கைப்பற்றினார்.



2-வது செட்டில் பிவி சிந்து 11-8 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் ஸ்கோர் 11-11, 15-15 என சமநிலையில் சென்றது. அதன்பின் பிவி சிந்து 19-18 என முன்னிலைப் பெற்று, 21-19 என 2-வது செட்டை கைப்பற்றினார். பிசி சிந்து அரையிறுதியில் அகேனா யமகுச்சியை எதிரகொள்கிறார்.
Tags:    

Similar News