செய்திகள்

U19 ஒருநாள் கிரிக்கெட்- முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதில் வீழ்த்தியது இந்தியா

Published On 2018-07-30 14:03 GMT   |   Update On 2018-07-30 14:03 GMT
இலங்கையில் நடைபெற்று வரும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெற்றது. #IND19vSL19
இந்தியா - இலங்கை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட நான்கு நாள் டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என வென்றது. இந்நிலையில் இன்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. கொழும்பில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணியின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை இளைஞர்கள் 38.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 143 ரன்கள் சுருண்டது.

பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய இளைஞர அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக பவன் ஷா, அனுஜ் ராவத் ஆகியோர் களம் இறங்கினார்கள். பவன் ஷா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்னும், ஆர்யன் ஜூயல் 20 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரர் அனுஜ் ராவத் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் சேர்த்தார்.

ஐந்தாவது வீரராக களம் இறங்கிய சமீர் சவுத்ரி 35 பந்தில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வியாழக்கிழமை நடக்கிறது.
Tags:    

Similar News