செய்திகள்

பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு- தவான் டக், புஜாரா 1

Published On 2018-07-25 10:50 GMT   |   Update On 2018-07-25 10:50 GMT
எசக்ஸ் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. தவான் டக், புஜாரா 1 ரன்னிலும் வெளியேறினார்கள். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னோட்டமாக மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் சசக்ஸ் அணியை எதிர்த்து இந்தியா விளையாடுகிறது.

இந்த ஆட்டம் இன்று செல்ம்ஸ்போர்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முரளி விஜய், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை எம் கோல்ஸ் வீசினார். இந்த ஒவரின் 3-வது பந்தில் ரன்ஏதும் எடுக்காமல் தவான் ஆட்டம் இழந்தார். அடுத்து புஜாரா களம் இறங்கினார். இவர் ஆட்டத்தின் 3-வது ஓவரின் 4-வது பந்தில் 1 ரன்கள் எடுத்த நிலையில ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 5 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.



3-வது விக்கெட்டுக்கு முரளி விஜய் உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்தியா 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. முரளி விஜய் 6 ரன்னுடனும், ரகானே 5 ரன்னுடனும் விளையாடி வருகிறார்கள்.
Tags:    

Similar News