செய்திகள்

இங்கிலாந்து தொடர்- இந்திய அணியில் குருணால் பாண்டியா, அக்சார் பட்டேலுக்கு இடம்

Published On 2018-07-01 15:37 GMT   |   Update On 2018-07-01 15:37 GMT
வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்துள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் குருணால் பாண்டியா இடம் பிடித்துள்ளார். #ENGvIND
மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்திருந்தார்.

பயிற்சியின்போது வாஷிங்டன் சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்குப் பதிலாக டி20 போட்டியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரும், இடதுகை பேட்ஸ்மேனும் ஆன குருணால் பாண்டியா இடம்பிடித்துள்ளார். இவர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் ஆவார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அக்சார் பட்டேல் இடம் பிடித்துள்ளார்.



குருணால் பாண்டியா இந்திய அணியில் இடம் பிடித்தால் இர்பான் பதான், யூசுப் பதான் சகோதரர்களுக்கு அடுத்தபடி களம் இறங்கும் சகோதரர்கள் இவர்கள் ஆவார்கள்.
Tags:    

Similar News