செய்திகள்
மும்பையிடம் மோசமாக தோல்வியடைந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ஷாருக் கான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மும்பையிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததற்கு ஷாருக்கான அந்த அணி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். #IPL2018 #KKRvMI
ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது.
பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 108 ரன்னில் சுருண்டது. சொந்த மைதானத்தில் எந்தவித போராட்டமும் இல்லாமல் சரணடைந்தது.
நேற்றைய போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான ஷாருக் கான் நேரில் கண்டு ரசித்தார். இந்த மோசமான தோல்வியால் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விளையாட்டு என்பது ஸ்பிரிட் (Spirit) பற்றியது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.
பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 108 ரன்னில் சுருண்டது. சொந்த மைதானத்தில் எந்தவித போராட்டமும் இல்லாமல் சரணடைந்தது.
நேற்றைய போட்டியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களின் ஒருவரான ஷாருக் கான் நேரில் கண்டு ரசித்தார். இந்த மோசமான தோல்வியால் அவர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஷாருக் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘விளையாட்டு என்பது ஸ்பிரிட் (Spirit) பற்றியது. வெற்றி தோல்வியால் அது பாதிக்காது. ஆனால் நேற்றைய தோல்விக்கு, அணியின் உரிமையாளராக உத்வேகத்தின் குறைபாட்டிற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.