செய்திகள்

மனைவியின் ஆபரேசன் வெற்றிகரமாக முடிவடைந்தது: பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தவான்

Published On 2017-09-23 13:17 GMT   |   Update On 2017-09-23 13:17 GMT
மனைவி ஆயிஷாவிற்கு வெற்றிகரமாக ஆபரேசன் முடிவடைந்தது என்று தெரிவித்துள்ள தவான், பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேனாக தவான் இருந்து வருகிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்த இவர், இலங்கை தொடரிலும் அசத்தினார்.

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடரின் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் தவான் இடம்பிடித்திருந்தார்.

தவான் போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்த நிலையில் அவரது மனைவி ஆயிஷாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்திரேலியாவில் ஆபரேசன் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. கடினமான காலத்தில் மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என்பதால் முதல் மூன்று போட்டியில் இருந்து விலகினார்.



தற்போது அவரது மனைவிக்கு ஆபரேசன் நல்ல முறையில் நடந்து முடிந்ததாகவும், தனது மனைவியின் உடல்நலம் தேறிவருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவி நல்லமுறையில் திரும்பி வருவதற்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News