செய்திகள்

அக்சார் பட்டேலுக்கு காயம்: இந்திய அணியில் ஜடேஜா சேர்ப்பு

Published On 2017-09-16 15:18 GMT   |   Update On 2017-09-16 15:18 GMT
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

இதற்கான இந்திய அணியில் அக்சார் பட்டேல் இடம்பிடித்திருந்தார். சென்னை மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அக்சார் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இதனால் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். நாளைய போட்டியில் ஜடேஜா ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News